amman

ஸ்ரீ உலக நாயகி அம்பாள்

வாடிய வதனத்தை
வாழ வைப்பேன்

ஸ்ரீ உலக நாயகி துணை

அருள் பொழியும்
நாடாக விளங்குவது

அறக்கட்டளை

"வாடிய வதனத்தை வாழ வைப்பேன்" என்ற அன்னையின் அருள்வாக்கின் படி ஸ்ரீ யோக மாயா சக்தி பீடம் அறக்கட்டளை 2004 லில் அமைக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பதையும், மருத்துவ முகாமிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு அன்னையிட்ட பணியினை இன்றுவரை வெகு சிறப்பாக அறக்கட்டளை நடத்தி வருகிறது. கோசாலை , கல்விச் சேவை முதலியவைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென அம்பாள் கட்டளையிட்டுள்ளாள்.

Sri ulaganayaki amman

ஸ்ரீ உலக நாயகி அம்பாள்

தல வரலாறு

அருள் தரும் ஸ்ரீ உலக நாயகி துணை பக்தி மிகுந்த பாரத நாட்டில் அருள் பொழியும் நாடாக விளங்குவது 19 நூற்றாண்டில் ஸ்ரீ ஆதி உலகநாயகி அம்பாள் திருக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. 1978 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் அம்பாளின் அருளால் நல்ல முறையில் நடந்தேறியது. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 1982, 1994, 2006 ஆகிய ஆண்டுகளில் வெகு விமர்சையாக நடைபெற்றன. தீந்தமிழ்நாடு எனப்பெருமை பெற்ற தமிழ் நாட்டில் அருள் வழங்க அன்னை அருள்தரும் "ஸ்ரீ உலக நாயகி அம்பாள்" கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நான்குநேரி ஆகும் தொன்று தொட்டே ஆலயம் கட்டி தெய்வ வழிபாடு நடந்து வந்த போதிலும், இந்த கலியுகத்தில் பக்தர் ஒருவர் மனதில் தோன்றி தனக்கென்று இருந்த ஒரு கோவிலை புதுப்பித்துக் கட்டி அதனுள் அன்புடன் தானிருந்து மற்றும் ஒருவரை தன்னை உபாசிக்கச் செய்து அவர் மூலமாக மக்களுக்கு அருள் பாலிக்கும் முகமாக தோன்றியதே "நான்குநேரி அருள் தரும் "ஸ்ரீ உலக நாயகி அம்பாள் திருக்கோவில்" ஆகும். ஐயப்பன் என்பது ஐயம் தவிர்ப்பவர் என்றோ அல்லது தன்னை நாடி வரும் பக்தர்களின் ஐயத்தை தவிர்க்க வேண்டும் என்று மனதில் கொண்டு தானே என்னவோ அன்னை தான் அருள் பாலிக்க திரு. ஐயப்பன் என்ற பெயரில் உபாசகரை தேர்ந்தெடுத்தாள் போலும்.

சக்திதாசன் மூலமாக அன்னை தன்னை பரிபூரணமாக நம்புகின்றவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டியே, தான் கோவில் கொண்டிருப்பதாகவும், முகமதியர் காலம் தொட்டே இங்கு இருப்பதாகவும் பாலகனை தொட்டிலில் இருந்த காலம் முதல் இப்பணி செய்யக் காத்து வந்தேன் என இனிய மொழி பகர்ந்தார். உபவாசகர் ஐயா திரு. ஐயப்பனிடம், அம்பாள் தனக்கு புதியதொரு இடத்தில் கோவில் கட்டவேண்டும் எனவும் நான்குனேரியில் வரப்போகும் நான்கு வழி சாலையில் இருந்து உள்ளிருக்கும் எனவும், அதற்கடையாளமாக கருநாகமொன்று அவ்விடத்தில் படமெடுத்து நிற்கும் எனவும், அதுவே யாம் குடி கொள்ளும் இடமென்றும் அருள்வாக்கில் கூறினாள். உபவாசகர் ஐயா திரு ஐயப்பன் நேரில் சென்று பார்க்கும் பொழுது அம்பாள் கூறியபடி குழாயின் மீது கருநாகமொன்று இருந்தது. அவ்விடத்தை அடைந்தவுடன் அங்கு மட்டும் தூவானமாக மழை பொழிந்தது. அம்பாள் பூவானமாக பொழிந்து தன் சம்மத்தைத் அருளினாள். அருள் வாக்கில் இவ்விடத்தில் நாற்கர சாலை வரும் எனவும், அதன் அருகில் கோவில் வந்துவிடும் எனவும், பதினெட்டு கரமுடையாள் 72 அடி உயரத்தில் அம்பாள் வீற்றிருப்பாள் எனவும் கூறினாள். இதற்கு சாட்சியாக வீரமணிதாசன் பாடி 2004 வெளிவந்த "ஏ ஆயி…" என்னும் குறுந்தகடு பாடலின் வரிகள் உள்ளன, அவ்வரிகள் "நாலு பாதை கூடுகின்ற நங்கை நகரிலே ஒரு நல்ல குறி சொல்லுவதில் உனக்கு நிகரில்லை" அவ்வண்ணமே கோவில் கட்டி கும்பாபிஷேகம் 2006 ஆம் ஆண்டு சிறந்த முறையில் நடந்தேறியது. மன்னர்கள், தேவர்கள், பூதங்கள் கட்டியதும் வரலாற்றில் உண்டு . சாமானியர் கோவில் கட்டுவதற்கு பாலகன் ஐயப்பனை நியமித்தது அவர்களின் பூர்வ புண்ணியமே. ஆகவே பக்த கோடிகள் அனைவரும் அன்னை "அருள்தரும் ஸ்ரீ உலக நாயகி அம்பாள்" தரிசனத்துடன் அம்பாளின் அருள் ஆசி பெற்று அருள் வாக்கிற்கு பாத்திரமாக வேண்டுகிறோம்.

அஷ்டாதச புஜ துர்க்கா

பதினெண் கரமுடையாள் (அஷ்டாதச புஜ துர்க்கா) வட கிழக்கில் இருக்கும் கொல்கத்தா காளி தென் தமிழகத்தில் நெல்லைக் காளியாக அமைந்திருக்கிறாள். தில்லைக் காளி நெல்லையில் எல்லைக் காளியாக அமையவிருப்பது பக்தர்களின் வேண்டுகோளே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும். தென்னகத்தில் காளி தென்முகமாக அமைவது இன்னும் சிறப்பு. இத்தலத்தின் மண்ணை மிதித்தவர்களுக்கு மரண பயம் நீங்கி, கடன் தொல்லைகள் களைந்து, பிள்ளை கலி தீர்த்து, பில்லி சூனியங்களை அகற்றி, பிணிகளை விலக்கி வாழ்வில் வளம்பெறச் செய்கிறாள்.

18 karam udaiyal

அஷ்டாதச புஜ துர்க்கா

அருள் வாக்கில் இவ்விடத்தில் நாற்கர சாலை வரும் எனவும், அதன் அருகில் கோவில் வந்துவிடும் எனவும், பதினெட்டு கரமுடையாள் 72 அடி உயரத்தில் அம்பாள் வீற்றிருப்பாள் எனவும் கூறினாள் பதினெட்டு கரமுடையாள் நெல்லையின் எல்லையில் நான்குனேரியில் நெல்லையில் அடையாளமாய் அம்பாள் அருள்வாக்கு கூறிய படி சுமார் 72 அடியில் எழுந்தருள உள்ளாள். அதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் முடிந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் அம்பாள் அருளால் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் தங்களால் முடிந்த காணிக்கைகளை நன்கொடையாக வழங்கி அம்பாளின் அருளுக்கு பாத்திரமாக வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சந்நிதிகள்

  • ஸ்ரீ உலக நாயகி அம்பாள் மூலவராக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்
  • அஷ்டாதச புஜ காளி தென் முகமாக அமைந்து வரங்களை அருளிக் கொண்டிருக்கிறாள்
  • பாதாளத்தில் வீற்றிருக்கும் லிங்க பைரவிக்கு அபிஷேகம் அலங்காரம் உண்டு
  • ஈசனியத்தில் வனப்பேச்சி காவல் புரிகிறாள்
  • கிழக்கு முகமாக புற்றுக்கோவிலில் நாக வடிவில் உலகநாயகி அம்பாள் அருள் பாலிக்கிறாள்
  • சப்த கன்னிமார்களாக பிராமி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகியவர்கள் அமைந்திருப்பது சிறப்பு

கட்டுமான திருப்பணிகள்

கோவில் மட்டும் சிலை கட்டுமானத்திற்கான செலவுகள் இவ்விடம் கொடுக்கப்பட்டுள்ளன. முடிக்கவேண்டிய திருப்பணி வேலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன . பக்தர்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

சிலை கட்டுமானத் திருப்பணிகள்

Nellai Kali
  • ரூ . 5500.00 தலா ஒரு சதுர அடிக்கு
  • 1. 18 கரமுடையாளின் அடி முதல் முடி வரை படி அமைக்கும் பணி
  • 2. 18 கரமுடைய அம்பாளின் பூச்சு முடிக்கும் திருப்பணி
  • 3. 18 கரமுடைய அம்பாளின் வர்ணம் பூசும் திருப்பணி
  • 4. 18 கரமுடைய அம்பாளின் இடிதாங்கி அமைக்கும் திருப்பணி
  • 5. 18 கரமுடைய அம்பாளின் கைகளுக்கு மின்விளக்குப் பணி
  • 6. 18 கரமுடைய அம்பாளின் முடிக்கு மின்விளக்குப் பணி
  • 7. 18 கரமுடைய அம்பாளுக்கு மின்தூக்கி அமைக்கும் பணி
  • 8. படிப் பாதைக்கு மின் விளக்கு அமைக்கும் திருப்பணி
  • 9. படிக்கு பாதுகாப்புச் சுவர் அமைக்கும் திருப்பணி

கோவில் கட்டுமானத் திருப்பணிகள்

Pesum deivam
  • ரூ . 3500.00 தலா ஒரு சதுர அடிக்கு
  • 1. தியானக்கூடம், தளத்திற்கு Tiles ஒட்டும் திருப்பணி, 10000 sqft
  • 2. தியானக்கூடம், சுவற்றிற்கு Tiles ஒட்டும் திருப்பணி, 40000 sqft
  • 3. அன்னதானக்கூடம் தளத்திற்கு Tiles ஒட்டும் திருப்பணி, 10000 sqft
  • 4. அன்னதானக்கூடம் சுவற்றிற்கு Tiles ஒட்டும் திருப்பணி, 40000 sqft
  • 5. சுற்றுச் சுவர் அமைக்கும் திருப்பணி, 40000 sqft
  • 6. முதல் தளத்திற்கு Tiles ஒட்டும் திருப்பணி, 20000 sqft
  • 7. முதல் தளம் சுற்றுச் சுவர் அமைக்கும் திருப்பணி , 40000 sqft
  • 8. முதல் தளம் சுவற்றிற்கு Tiles ஒட்டும் திருப்பணி , 40000 sqft
  • 9. முதல்தளம் நெற்றிக்கு படங்கள் வரையும் பணி
  • 10. இரண்டாம் தளம் RCC தளம் அமைக்கும் திருப்பணி , 20000 sqft

கற்சிலை அமைக்கும் திருப்பணிகள்

Nellai kaali
  • ரூ . 15,000.00 தலா ஒரு சிலைக்கு
  • 1. லிங்க பைரவி , விமான கோபுரங்கள் அமைக்கும் பணி
  • 2. வனப்பேச்சி சிலை , விமான கோபுரங்கள் அமைக்கும் பணி
  • 3. புற்றுக்கோவில், விமான கோபுரங்கள் அமைக்கும் பணி
  • 4. பிராமி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி
  • 5. மகேசுவரி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி
  • 6. கௌமாரி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி
  • 7. வைஷ்ணவி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி
  • 8. வராகி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி
  • 9. இந்திராணி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி
  • 10. சாமுண்டீஸ்வரி திருவுருவச் சிலை அமைக்கும் திருப்பணி